TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி சான்றிதழ் இனி ஆயுள்காலம் முழுவதும் செல்லும் என அறிவிப்பு
TET தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு ஓர் மகிழ்வான செய்தி :
தமிழகத்தில் 80 ஆயிரம் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வருகின்ற நிலையில் TET தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் எனும் அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய ஆசிரியர் குழு NCTE வெளியிட்டுள்ள செய்தியில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் ஆயுள் முழுவதும் செல்லும் என தெரிவித்துள்ளது. எனவே இதன் காரணமாக புதிதாக வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் இனி வழங்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அதேபோல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கு ஆயுள் சான்றிதழ் நீட்டிப்பு வழங்குதல் குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழு தெரிவித்துள்ளது.
NCTE Letter - TET Certificate Valid for Life Time - Download here...

0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு