814 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் இருந்தால் அனுப்பலாம்
கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 814 கணினி பயிற்றுநர் இடங்களை நிரப்புவதற்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே கணினி அறிவியல் தேர்வு முறைகேடு தொடர்பான புகார்களை வருகின்ற மார்ச் 1 ஆம் தேதிக்குள் இரு நபர் விசாரணை கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரு நபர் கமிட்டி விசாரணை துவங்கியுள்ளது. கணினி பயிற்றுநர் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது தேர்வு தொடர்பாக குறைகள் மற்றும் புகார்கள் இருந்தால் அதை வருகின்ற மார்ச் 1 மாலை 5 மணிக்குள் trbtwomemberscommittee@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். மேலும் அதன் பிரதிகளை சென்னை பள்ளிக் கல்வி வளாகத்தில் செயல்படும் இரு நபர் கமிட்டிக்கு தபாலில் அனுப்ப வேண்டும் புகார் தெரிவிப்பவர், கமிட்டி அழைக்கும் போது விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு