9 முதல் 10 வகுப்பு வரை பள்ளிகளை தொடங்க பெற்றோரிடம் இசைவு கடிதம் பெறுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
பார்வை ஒன்றில் உள்ள அரசாணைகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகள் அனைத்து பள்ளிகளும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பார்வை 2-ல் உள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிக்கை மற்றும் பார்வை 3-ல் உள்ள அரசாணையில் 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
9 மற்றும் 11ஆம் வகுப்புகள் 8.2.2021 முதல் செயல்பட பார்வை (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ள கோவிட்-19 தொடர்பான உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் இணைப்பில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களின் இசைவு மற்றும் பள்ளிகளின் இசைவு படிவத்தினை பெற்றிடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு