பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதிய ரூ 7, 700 லிருந்து ரூ 10,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிக்கல்வி மற்றும் மாநில திட்ட இயக்குநரின் கருத்துருவை ஏற்று மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணை மூலம் அரசு பள்ளிகளில் கல்விசார் (உடற்கல்வி, ஓவியம், இசை மற்றும் வாழ்க்கை கல்வி) இணை செயல்பாடுகள் பயிற்றுவிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 16,549 பகுதிநேர பயிற்றுநர் பணியிடங்களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதிநேர பயிற்றுநர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகள் சிறக்க செய்து வருவதனால் அவர்களது பணி திறமையை மேலும் மேம்படுத்தும் பொருட்டு மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர வழிமுறைகளுடன் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்களது மாத ஊதியத்தை (மே மாதம் நீங்களாக 11 மாதங்களுக்கு மட்டும்) ரூபாய் 7700 ரூபாயிலிருந்து ரூபாய் 10,000 ஆக ( ரூபாய் பத்தாயிரம் மட்டும்) உயர்த்தி வழங்க முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்:
1. தற்போது பணியில் உள்ள பகுதி நேரப் பயிற்றுனர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு மறுஒதுக்கீடு செய்து இனி வரும் காலங்களில் அவர்கள் வாரத்திற்கு 3 முழு நாட்கள் பணி புரிவதை உறுதி செய்ய வேண்டும்.
2. பகுதிநேர பயிற்றுநர்கள் பணிபுரியும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழங்கும் கால அட்டவணையின் படி இவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு கல்விசார் இணை செயல்பாடுகள் பயிற்றுவிக்க வேண்டும்.
3. இவர்களுக்கான வருகைப்பதிவேடு சார்ந்த தலைமையாசிரியரால் முழுமையாக பராமரிக்கப்பட வேண்டும்.

0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு