மேலும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை ரெம்டிசிவிர் மருந்து பற்றாக்குறையும் எதுவும் இல்லை என்று விளக்கமளித்தார். மேலும் தமிழக சுகாதாரத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கமளித்தார். இதைதொடர்ந்து மூத்த வழக்கறிஞர்கள் பலரும் ஆஜராகி அடுக்கு அடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.
மத்திய அரசு தரப்பில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது தொடர்பாக தமிழக அரசுடன் ஆலோசித்து அதன் பிறகுதான் நடவடிக்கை எடுத்தோம். இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ள காரணத்தால் அதனை பரிசலினை செய்ய உள்ளோம் என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தடுப்பூசி மற்றும் ரெம்டிசிவிர் மருந்து ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும் வருகின்ற மே மாதம் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். எனவே ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ஏப்ரல் 28-ஆம் தேதி அன்று வெளியிட வாய்ப்புள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் இதில் எந்த சமரசம் செய்ய கூடாது. வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தக்கூடிய மற்றும் தொடர்புடைய வாகனங்கள் மட்டுமே இந்த 2 நாட்களில் அனுமதிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.

0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு