Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

50% அரசு ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணிபுரிய உத்தரவிட தமிழக அரசை அரசு பணியாளர் சங்கங்கள் கோரிக்கை

அனைத்து துறையை சேர்ந்த அரசு பணியாளர்களும், 50% சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்று, அரசுக்கு அரசு பணியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் தலைமை செயலர் அவர்களுக்கு தமிழ்நாடு தலைமை செயலக சங்க முன்னாள் செயலரான வெங்கடேசன் அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனு விபரம்:


கொரோனா தொற்றின் 2-ஆம் அலை மிகவும் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தலைமை செயலகம் மற்றும் அமைச்சு பணி தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர், சென்னையின் அண்டை மாவட்டங்களில் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் மின்சார ரயில்களை நம்பி உள்ளனர். இந்த சூழ்நிலையில் அலுவலக நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருப்பது வழக்கமாக உள்ளது. 


மாநகர பேருந்துகளிலும் இதே நிலைமையில் தான் உள்ளது. சென்னையில் மட்டுமின்றி சென்னையை தவிர்த்து மாற்ற மாவட்டங்களிலும், அரசு ஊழியர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியே அலுவலகம் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது நுாற்றுக்கும் மேலான தலைமை செயலக பணியாளர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது. பல துறைகளின் தலைவர் அலுவலகங்களில் போதுமான இட வசதியின்றி இட நெருக்கடி உள்ளது. 


இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாய சூழ்நிலையே நிலவி வருகிறது. சென்ற ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாக அரசு 50% பணியாளர்களை சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிட்டது. கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை கட்டுப்படுத்தும் விதமாக தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து துறை அரசு ஊழியர்களையும் 50% என சுழற்சி முறையில் பணிபுரிய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments