முறைசாரா கல்வி திட்டத்தின் இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 15 வயதிற்கும் மேற்பட்ட எழுதவும் படிக்கவும் தெரியாத 3.10 லட்சம் பேருக்கு 'கற்போம் எழுதுவோம்' என்ற இயக்கம் மூலமாக எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெற்று இயங்கி வரும் தொடக்க, நடுநிலை பள்ளி வளாகங்களில் சுமார் 15, 823 கற்போர் எழுத்தறிவு மையங்களை உருவாக்கியுள்ளது.
தன்னார்வ ஆசிரியர்களின் உதவிகளுடன் கற்பித்தல் தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் கொரோனா அதிகரிப்பு சூழலை கருத்தில் கொண்டு, கற்போர் பயிற்சி திட்டத்தில் கூறப்பட்டுள்ள பாடத்தின் கருத்துகளை, ஒலி மற்றும் ஒளி வடிவிலான வீடியோக்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவர தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாட வீடியோக்கள், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் படிப்பவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ கல்வி டிவி-யில் தினமும் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இன்று முதல் தினமும் மாலை 7 மணி முதல் அரை மணி நேரம் பாடங்கள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கீழ் அதிக அளவில் முதியோர் படித்து வருகின்றனர்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு