Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்.

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுளளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் மறுஉத்தரவானது வரும் வரையில் வரும் மே மாதத்திலும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேரங்களில் அமலில் உள்ள முழுஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும்.


வருகின்ற மே 2-ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும்  கூட வேட்பாளர்கள் மற்றும் தேர்தல்  ஏஜெண்டுகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கபடாது.


அதேபோல் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.


திரைப்படத் துறையைப் பொருத்தவரை தமிழகத்தில் சினிமா படப்பிடிப்பு மற்றும் டி.வி தொடர் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும் முழு ஊரடங்கு தினம் அன்று சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் குறைந்த அளவே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஹோட்டல்களில் காலை 6 - 10 மணி, மதியம் 12 - 3 மணி, மாலை 6 - இரவு 9 மணி வரை பார்சல் முறையிலான சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உணவுகளை டெலிவரி செய்ய  காலை 6 - 10 மணி, மதியம் 12 - 3 மணி, மாலை 6 - இரவு 9 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments