தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா பாதுகாப்புமையம் ஆகிய இடங்களில் அமைச் சர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: கொரோனா காலத்தில் தனியார்பள்ளி ஆசிரியர்களின் நிலைமிகவும் வருந்தத்தக்க ஒன்றுதான். இவர்களில் பலரும் தங்களின் சிரமங்கள் குறித்து செல்லிடப்பேசியிலும், மின்னஞ்சலிலும் என்னிடம் தெரிவித்துள்ளனர். இவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க விரைவில் முதல்வருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாரணம் கிடை இதேபோல், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம்கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனை யில் இறக்காமல் வீட்டிலோ அல்லது வரும் வழியிலோ பெற்றோர் இறந்தாலும், அந்தக்குழந்தைகளுக்கும் உரிய நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்ய முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.நீட்தேர்வு குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்ப டும்.மேலும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்கு பிறகுதான் தேர்வு நடத்தப்படும் என்றார்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு