Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன் என விளக்கம்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார்.பாதுகாப்போடு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு நோயாளிகளிடம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.அவர்கள் உடல் எப்படி இருக்கிறது, சிகிச்சை முறை நன்றாக இருக்கிறதா, தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் நோயாளிகளிடம் அன்பாக கேட்டறிந்தார்.

இதையடுத்து கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.கோவையில் கொரோனா கேஸ்கள் இரண்டு நாட்களாக குறைத்தாலும், தமிழகத்திலேயே கோவையில் மட்டும்தான் கொஞ்சம் நிலைமை மோசமாக உள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார்.நான்கு மாவட்டங்களில் கொரோனாவை துரிதமாக கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Post a Comment

0 Comments