தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது.நாளை முதல் புதியகல்வி ஆண்டு துவங்க உள்ளது.நாடு முழுதும் உள்ள பள்ளிகளில், மத்திய இடைநிலை கல்விவாரியமான சி.பி.எஸ்.இ., - இடைநிலை சான்றிதழ் கல்வி அமைப்பான ஐ.சி.எஸ்.இ., ஆகிய பாடதிட்டங்களிலும் மற்றும் அந்தந்த மாநில பாட திட்டங்களிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாட திட்டங்களில், ஏப்ரல் மாதம் புதிய கல்வி ஆண்டு துவங்கிவிட்டது.மாணவர்களுக்கு புதிய கல்விஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படுகின்றன.சுற்றறிக்கை தமிழக பாடதிட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத்த்தில் தான் கல்வியாண்டு துவங்கும்.அதன்படி, இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு இருந்தபோதும் தேர்தலுக்கு முன் பாடங்கள் முடிக்கப்பட்டுவிட்டன.
மே மாதம் 1-ஆம் தேதி முதல் கோடைவிடுமுறையை பள்ளிகல்வி இயக்குனரகம் அறிவித்தது.புதிய கல்விஆண்டுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, மே மாத இறுதியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என அப்போது அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது.நாளை முதல் புதிய கல்விஆண்டு துவங்கவுள்ளது.கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதும், ஜூன் 1 முதல் ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது.அதன்படி, ஆன்லைன் வகுப்புகள் துவங்கின.புதிய கல்விஆண்டு நாளை துவங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை.மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள், மாவட்ட கல்விஅதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு புதிய கல்விஆண்டு குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் எந்த தகவலையும் அனுப்பவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு