தமிழக அரசுக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் சமக்ர சிக்சா (SAMAGRA SHIKSHA) திட்டத்தில் பணியாற்றிவரும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட முழுநேர தொகுப்பூதியப் பணியாளர்களாகிய நாங்கள் கீழ்க்கண்ட எங்களது கோரிக்கைகளை பணிவுடன் சமர்ப்பிக்கிறோம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் (அனைவருக்கும் கல்விஇயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்) தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் 1500-க்கும் மேற்பட்ட முழு நேர பணியாளர்கள்(கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள், கணக்காளர்கள், கணினிவிவரப்பதிவாளர்கள், கணினிவகைப்படுத்துநர், பொறியாளர்கள், தகவல் நிர்வாக மேலாண்மையாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள்) மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் (2002 முதல் 2012 வரை), மாவட்ட அளவில் நடைபெற்ற எழுத்துத்தேர்வு மூலம் தொகுப்பூதியத்தில் (2014-15) முதல் வெவ்வேறு காலங்களில் பணியமர்த்தப்பட்டு தற்போது 6 ஆண்டுகள் முதல் 10-ஆண்டுகளுக்கு மேலாகப்பணிபுரிந்து வரும் எங்களை கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு காலமுறை ஊதியத்திற்கு உட்படுத்திபணி நிரந்தரம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எங்கள்வாழ்வில் ஒளிவிளக்கேற்றி நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தி உதவிடவும் தமிழ்நாட்டில் சமூகநீதிகாக்கும் அரசு எங்களை கருணை உள்ளங்கொண்டு பணி நிரந்தரம் செய்ய மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எங்கள் கோரிக்கையை கணிவுன் பரிசீலிக்க வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் பணிபுரியும் முழு நேர தொகுப்பூதிய பணியாளரகளாகிய எங்களுக்கு இதற்கு முந்தைய அரசு எந்தவிதமான தொழிலாளர் பலன்களையும் முறையான ஊதிய உயர்வையும் வழங்கப்படவில்லை ஆதலால் இதுவரை குறைவான ஊதியமே பெற்று வருகிறோம்.மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கும் ஊதியமும் முறையாக வழங்கப்படவில்லை எனவே மாண்புமிகு ஐயா அவர்கள் எங்களுக்கு கருணை அடிப்படையில் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை செய்த கல்வித்தகுதிக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட பணிந்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
ஒருங்கிணைந்த கல்விதிட்டத்தில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு இதுவரையிலும் எந்தவிதமான மருத்துவக் காப்பீடு, ESI, பெண்களுக்கான மகப்பேறுகால விடுப்பு மற்றும் இதர சமூகநல பாதுகாப்புத் திட்டங்கள் வழங்காதல் தொகுப்பூதிய பணியாளர்கள் ஊதியமில்லா விடுப்பில் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.எனவே இத்திட்டத்தில் பணிபுரியும் முழுநேர பணியாளர்களுக்கு மருத்துவக்காப்பீட்டு வசதி மற்றும் இதர சமூகபாதுகாப்பு வசதி வழங்கிட மாண்புமிகு ஐயா அவர்களை பணிந்து வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் பணியாளர்கள் பணிபுரிவதால் அவர்களுக்கான ஊர்திபடி (Conveyance Allowance) 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் உயர்த்தி வழங்கிட மாண்புமிகு ஐயா அவர்களை பணிந்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் 34/2020
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு