பார்வை ஒன்றில் காணும் அரசாணையில், பல்வேறு அரசாணைகளின்படி தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்ட அரசு / நகராட்சி / உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6,156 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதப் பணியிடங்களுக்கு கடைசியாக 01.01.2018 முதல் 31122020 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2 மேற்காணும் தற்காலிக பணியிடங்களுக்கு 0101.2021 முதல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி ஆணையர், அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார். மேலும் மே 2021ம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை பார்வை 2.00 காணும் கடிதங்களின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஜுன் 2021 ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர், கருத்துரு அனுப்பியுள்ளார்.
3. பார்வை 1ல் குறிப்பிட்டுள்ள அரசாணையில் தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துரு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இக்கடிதத்தின் இணைப்புகளில் 1 முதல் VI-ல் கண்டுள்ள 6158 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஜுன் 2021-ஆம் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான ஜுன் 2021-ம் மாதத்திற்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு